இந்நிலையில், சல்மான் கான் அவரது வீட்டிலேயே கொலை செய்து, அவரின் வாகனங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மகாராஷ்டிரா அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு மிரட்டல் செய்தி வந்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 1998 ஆம் ஆண்டு, ராஜஸ்தானில் படப்பிடிப்புக்கு சென்ற சல்மான் கான் மான்களை வேட்டையாடியதாக கூறப்பட்ட நிலையில், இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற்றிருந்தார்.