படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் வித்யுத் ஜம்மால், விக்ராந்த் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 70 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் முருகதாஸ் இந்தியில் சல்மான் கானை வைத்து இயக்கிய சிக்கந்தர் திரைப்படம் படுமோசமான தோல்வியைப் பெற்றது. வசூல் படுமோசமாக இருந்தது. படத்தைப் பார்த்த பலரும் இது முருகதாஸ் படம் போலவே இல்லை என்று புலம்பி வருகின்றனர். இந்நிலையில் முருகதாஸ் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் மதராஸி படத்தின் வியாபாரத்தைப் பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் சிவகார்த்திகேயனின் அமரன் படம அவரை வட இந்தியாவிலும் கொண்டு சேர்த்தது குறிப்பிடத்தக்கது.