அகமதாபாத் அருகே ஏற்பட்ட ஏர் இந்தியா AI171 விமான விபத்தில், 2016 முதல் 2021 வரை குஜராத் மாநிலத்தின் 16வது முதலமைச்சராக பதவியிலிருந்த பாஜக தலைவரும் ஆன விஜய் ரூபாணி உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. அவருக்கு வயது 68
குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உள்ளிட்ட 242 பேருடன் புறப்பட்ட போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களில் மேகானி நகர் பகுதியில் வீடுகள் அடங்கிய பகுதியில் விழுந்தது. அப்போது பயஙக்ர சத்தம் மற்றும் கருப்பு புகை மேலெழுந்ததாக கண்கூடான சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தை கேப்டன் சுமித் சபர்வால் மற்றும் துணை இயக்குநர் கிளைவ் குந்தர் இயக்கினர். உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்துகொண்டிருக்கின்ற நிலையில், ரூபாணியின் பெயர் பயணிகள் பட்டியலில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
2009ல் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியும், 2011ல் அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி கண்டுவும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் இன்று குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உயரிழந்தார்.