அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

Siva

செவ்வாய், 29 ஜூலை 2025 (18:17 IST)
தெலங்கானா மாநிலத்தில், 10 வயது சிறுமி தனது தந்தையாலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "அப்பா, என்னை விட்டுவிடுங்கள், எதுவும் செய்துவிடாதீர்கள்!" என அச்சிறுமியின் கதறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டுள்ளனர். தற்போது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
ஐந்தாம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமி, அவரது தாய் கூலி வேலைக்கு சென்றிருந்ததால் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, மதுபோதையில் வீடு திரும்பிய அவரது தந்தை, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், ரத்தப்போக்குடன் இருந்த சிறுமியை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
 
சிறுமிக்கு அதிக ரத்தப்போக்கு இருந்ததால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்தில் சிறுமியின் தந்தை தலைமறைவாகிவிட்டார். அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்