கொரோனா தொற்று 2020 ஆம் ஆண்டு நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த காலத்தில் முதலில் கேரளாவில் இந்த நோய் பரவல் கண்டறியப்பட்டது. பின்னர் இதன் பாதிப்பு இந்தியாவின் பல மாநிலங்களிலும் விரிவடைந்தது. இந்நிலையில் தற்போது சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட சில வெளிநாடுகளிலும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் ஆபத்தும் அச்சமும் நிலவி உள்ளது.
இந்த சூழலில் நமது நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத் துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர். இருப்பினும், சில பகுதிகளில் கொரோனா தொற்று அறிகுறிகள் காட்டும் நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர்.