தாஜ்மஹால் கட்ட வசதியில்ல.. காதல் மனைவிக்கு கோவில்! – சிலிர்க்க வைத்த போபால் முதியவர்!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (11:04 IST)
போபாலில் காதல் மனைவி கொரோனாவால் இறந்ததால் அவரது நினைவாக அவரது கணவர் கோவில் கட்டியுள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.

போபாலில் ஷாஜபூரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்ப்கெடா கிராமத்தை சேர்ந்தவர் நாராயண் சிங் ரத்தோர். இவர் கீதாபாய் என்பவரை தனது இளமைக்காலத்தில் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இருவரும் வயதான காலத்திலும் காதலோடு வாழ்ந்து வந்த நிலையில் கீதாபாய் கொரோனா காரணமாக சமீபத்தில் உயிரிழந்துள்ளார்.

தனது காதல் மனைவிடை இழந்த நாராயண் சிங் அவரது நினைவாக பிரம்மாண்டமாக நினைவு சின்னம் அமைக்க முடியாவிட்டாலும், தனது உழைப்பால் மனைவிக்கு சிறு கோவில் எழுப்பியுள்ளார். அதில் தனது மனைவிக்கு சிலை வைத்து வழிபட்டு வருகின்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்