பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 243 தொகுதிகளுக்கும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும்; வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெறும்.
இந்த சூழலில், சி வோட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன:
ஆட்சி அமைக்க எந்த கூட்டணிக்கு வாய்ப்பு?
தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA)40 %
இந்தியா கூட்டணி (RJD தலைமையில்)38.3 %
பிரசாந்த் கிஷோர் (JS)13.3 %
முதலமைச்சர் வேட்பாளர் விருப்பம்:
ஆட்சி அமைக்கும் வாய்ப்பில் NDA முன்னிலை வகித்தாலும், முதல்வர் வேட்பாளர் விருப்பத்தில் தேஜஸ்வி யாதவ் (RJD) 36.5% ஆதரவுடன் முதலிடம் பிடிக்கிறார்.
அவரைத் தொடர்ந்து, பிரசாந்த் கிஷோர் (23.2%), தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் (15.9%) மற்றும் சிராக் பாஸ்வான் (8.8%) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
மாநில பிரச்னைகளைத் தீர்க்கும் திறனில், 36.5% பேர் இந்தியா கூட்டணி மீதும், 34.3% பேர் NDA கூட்டணி மீதும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவுகள் பீகார் தேர்தலில் கடும் போட்டி நிலவுவதையும், ஆனால் மக்கள் RJD தலைவர் தேஜஸ்வி யாதவை விரும்பத்தக்க முதல்வர் வேட்பாளராகக் கருதுவதையும் காட்டுகின்றன.