அக்டோபர் 22 அன்று அதிகாலை 1 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். அக்டோபர் 23 முதல் 26 வரை தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, யாக பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இந்த நாட்களில், மாலை 6 மணிக்குச் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கத் தேரில் எழுந்தருளி உலா வருவார்.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், அக்டோபர் 27 அன்று நடைபெறுகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மாலை 4 மணிக்குச் சுவாமி கடற்கரையில் எழுந்தருளி, சூரபத்மனைச் சம்ஹாரம் செய்யும் வைபவம் நடைபெறும்.