போக்சோ சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (15:06 IST)
போக்சோ சட்டத்தை சில பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்றும் இதனால் அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அலகாபாத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 
 
சமீப காலமாக போக்சோ மற்றும் எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளில் பெண்கள் பொய் புகார்கள் பதிவு செய்கின்றனர் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 
 
2011 ஆம் ஆண்டில் பெண் ஒருவர் தொடர்ந்த பொய்யான பாலியல் வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. மாநில அரசிடம் இருந்து நிவாரணம் பெறவும் அப்பாவியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் ஆயுதமாக போக்சோ சட்டத்தை ஒரு சில பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 
 
அதேபோல் எஸ்.சி, எஸ்.டி வன்முறை தடுப்புச் சட்டத்தையும் ஒரு சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர் என்றும்  அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்