கெய்லுக்கு ஆதரவு கொடுத்த பஞ்சாப்

ஞாயிறு, 28 ஜனவரி 2018 (19:30 IST)
ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணியால் கைவிடப்பட்ட அதிரடி மன்னன் கெய்லை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

 
11வது ஐபிஎல் போட்டி வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றனர். அணிக்கான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் தற்போது பெங்களூரில் நடைபெற்று வருகிறது.
 
ஏலத்தில் 361 இந்திய வீரர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். எதிர்பாராத நிகழ்வுகள் நடந்தது. அனுபவ வீரர்களை விட இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். பெங்களூர் அணியில் விளையாடி வந்த அதிரடி மன்னன் கெய்லை யாரும் ஏலத்தில் எடுக்காத நிலையில் இன்று பஞ்சாப் அணி அவரை ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்