27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்லவேண்டிய கோயில்களும் பலன்களும் !!

வியாழன், 14 ஜூலை 2022 (10:24 IST)
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - நீங்கள் சனீஸ்வர பகவானை வணங்கி வருவது நல்லது. தொடர்ந்து திருநள்ளாறு சென்று வர உங்களுக்குத் திருப்பங்கள் பல கிடைக்கும்.


பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - நீங்கள் மகாகாளியை வணங்குவது நல்லது. திருவாலங்காடு சென்று வழிபட்டு வருவது திருப்பங்களை ஏற்படுத்தும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - நீங்கள் ஆதிசேஷனை வணங்குவது நல்லது. திருநாகை சென்று வழிபட்டு வருதல் நலம் தரும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - நாகநாதசுவாமியை வழிபடுவது நன்மையை செய்யும். ஒரு முறையேனும் திருநாகேஸ்வரம் சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - துர்காதேவியை வழிபட்டு வர நன்மைகள் மேலோங்கும். ஒருமுறையேனும் கதிராமங்கலம் சென்று வருதல் பல நன்மைகளை செய்யும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - சனீஸ்வரரை வழிபட்டு வர நன்மைகள் நடந்தேறும். ஒரு முறையேனும் திருநள்ளாறு சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - தென்முகக் கடவுளை வழிபட நன்மைகள் மேலோங்கும். ஒரு முறையேனும் ஆலங்குடி சென்று வாருங்கள் நன்மை உண்டு.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - சனீஸ்வரரை வழிபட நன்மைகள் மேலோங்கும். குச்சனூர் சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - சனீஸ்வரரை வழிபட நன்மைகள் மேலோங்கும். ஒரு முறையேனும் திருப்பரங்குன்றம் சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - தில்லை காளியை வழிபட வாழ்வில் பல நன்மைகள் மேலோங்கும். ஒரு முறை யேனும் சிதம்பரம் சென்று வருதல் நலம் தரும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - ராகுபகவானை வழிபட நன்மைகள் உண்டு. ஒரு முறையேனும் திருமணஞ்சேரி சென்று வருதல் பல நன்மைகளை செய்யும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - வாஞ்சியம்மனை வழிபட நன்மைகள் உண்டு. ஒரு முறையேனும் மூவனூர் சென்று வருதல் நலம் தரும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - ராஜதுர்கையை வழிபட நன்மை உண்டு. ஒரு முறையேனும் திருவாரூர் சென்று வருதல் நலம் தரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - ராஜதுர்கையை வழிபட நன்மை உண்டு. ஒரு முறையேனும் திருவாரூர் சென்று வருதல் நலம் தரும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - சனீஸ்வரரை வழிபட நன்மைகள் உண்டு. ஒரு முறையாவது திருவானைக்காவல் சென்று வருதல் நலம் தரும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - சனீஸ்வரரை வழிபட நன்மை உண்டு. ஒரு முறையேனும் சோழவந்தான் சென்று வருதல் நலம் தரும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - ஸ்ரீ மூகாம்பிகையை வழிபட்டு வர நன்மை உண்டு. ஒரு முறையேனும் திருவிடைமருதூர் சென்று வருதல் நலம்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை வணங்கி வருதல் நலம். ஒரு முறையேனும் பல்லடம் கோயில் சென்று தரிசித்து வருவது நலம் தரும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - தென்முகக் கடவுளை வணங்கி வருவது நல்லது. ஒரு முறையேனும் மதுரை சென்று சொக்கநாதரை வழிபட்டு வாருங்கள்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - தென்முகக் கடவுளான தட்சிணா மூர்த்தியை வணங்குவது நன்மை தரும். ஒரு முறையேனும் திருநாவலூர் சென்று வாருங்கள் நன்மை உண்டு.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - தட்சிணாமூர்த்தியையும், துர்காதேவியையும் வணங்குவது நன்மை தரும்.ஒரு முறையேனும் தர்மபுரம் கோயிலுக்கு சென்று வருதல் நலம் தரும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - ராஜகாளியம்மனை வணங்குவது நன்மை தரும். ஒரு முறையேனும் தெத்துப்பட்டி சென்று வருதல் நலம் தரும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - சனி, நாகராஜன் ஆகிய இந்த இரு தெய்வங்களையும் நீங்கள் வணங்குவது நன்மை தரும். முடிந்தால் ஒரு முறை கொடுமுடி சென்று வருதல் நலம்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - சனி, நாகராஜன் ஆகிய இந்த இரு தெய்வங்களையும் வணங்குவது நலம் தரும். முடிந்தால் திருச்செங்கோடு சென்று வழிபட்டு வரவும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - ஆதிசேஷன், சித்ரகுப்தர் ஆகிய இவர்களை வணங்குவது நலம் தரும். முடிந்தால் திருவையாறு கோயில் சென்று வணங்கி விட்டு வாருங்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - சனி, தக்ஷிணாமூர்த்தி ஆகிய இவர்கள் இருவரையும் வணங்குவது நல்லது. முடிந்தால் திருவையாறு சென்று இறைவனை வழிபட்டு வாருங்கள்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் - சனீஸ்வரரை வழிபடுவது நல்லது. முடிந்தால் ஓமாம்புலியூர் கோயிலுக்கு சென்று வருதல் நலம் தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்