பூஜை அறையில் குபேர லட்சுமி படம் வைத்து, தலை வாழை இலையில் நவதானியங்களை பரப்ப வேண்டும். நடுவில் நீர் நிரப்பிய சொம்பை வைத்து, மாவிலை கொத்து செருகிய மஞ்சள் பூசிய தேங்காயை வைத்து கலசம் நிறுவ வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழங்கள், பணம் மற்றும் சில்லறை நாணயங்களை வைத்துக்கொள்ள வேண்டும்.
அர்ச்சனை முடிந்ததும், வாழைப்பழம், பாயாசம் போன்றவற்றை நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.