பஞ்சாப் தங்கள் பேட்டிங்கின் போது 19 ஓவர் முடிவில் இருந்த போது ஸ்ரேயாஸ் சதத்தை நெருங்கியிருந்தார். ஆனால் 20 ஆவது ஓவரில் அவர் ஆடாமுனையில் இருந்தார். ஆடும் முனையில் இருந்த ஷஷாங்க் சிங்கிடம் அவர் “என்னுடைய சதம் பற்றிக் கவலைப்படாதே. நீ அடித்து ஆடு” என சொல்லியுள்ளார். இதை ஏற்று அவரும் அடித்து ஆட ஸ்ரேயாஸ் சதமடிக்க முடியாமல் போனது. ஆனாலும் தன்னலமற்ற இந்த செயலுக்காக ஸ்ரேயாஸ் ஐயருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.