இந்த தொடரின் ஐகான்களில் ஒருவராக இருக்கிறார், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. கடந்த சில ஆண்டுகளாக தோனி ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான். அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 43 வயதாகிறது. ஆனாலும் அவரை தற்போது சி எஸ் கே அணி அன்கேப்ட் ப்ளேயர் எனும் விதியின் மூலம் தக்கவைத்துள்ளது. மும்பைக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்கினாலும் ரன் எதுவும் சேர்க்கவில்லை.
இந்நிலையில் தோனி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் “இம்பேக்ட் ப்ளேயர் விதி பற்றிய பேச்சு வந்தபோது, நான் இப்போதே ஐபிஎல் தொடர் மிகவும் சிறப்பாகதான் போய்க் கொண்டிருக்கிறது. அதனால் இதற்கு மேலும் அதனை மேம்படுத்தத் தேவையில்லை என்று கூறினேன். ஆனாலும் அந்த விதி நடைமுறைக்கு வந்தது. அந்த விதி எனக்கு உதவும்தான். ஆனால் நான் பேட்டிங் மற்றும் கீப்பிங் இரண்டையும் செய்கிறேன்” எனக் கூறியுள்ளார்.