எனக்கு சர்ச்சைப் புதிதல்.. அவர்களுக்கு நன்றி- ஷமி கருத்து!

vinoth

புதன், 29 அக்டோபர் 2025 (08:01 IST)
இந்திய அணி உருவாக்கிய மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. இந்திய அணிக்காக உலகக்கோப்பை தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை அவர் தன் கைவசம் வைத்துள்ளார். ஆனாலும் காயம் காரணமாக அவர் அடிக்கடி அணியில் இருந்து விலக வேண்டிய சூழல் உருவாகிறது.

அதன்  பின்னர் காயத்தில் இருந்து குணமாகி உள்ளூர் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி வந்தாலும் அவருக்கு தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் தேர்வு செய்யப்படாதது குறித்துப் பேசியுள்ள ஷமி “என்னால் நான்கு நாட்கள் நடக்கும் ரஞ்சி போட்டியில் விளையாட முடியும் என்றால் ஒரு நாள் போட்டிகளில் விளையாட முடியாதா? இதுகுறித்து நான் முன்பே பேசிவிட்டேன். தேர்வு என்பது என் கையில் இல்லை.  எனக்கு ஃபிட்னெஸ் பிரச்சனை இருந்தால் நான் பெங்கால் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்க மாட்டேன். நான் எதுவும் பேசி தேவையில்லாமல் சர்ச்சையை உருவாக்க விரும்பவில்லை.” என ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் தெரிவித்துள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “நான் எப்போதுமே ஏதாவது ஒரு சர்ச்சையில் இருந்துகொண்டுதான் இருக்கிறேன். அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. அவர்களுக்கு நன்றி… இப்போது நான் மீண்டும் ரிதத்திற்கு திரும்பியுள்ளேன். அது மகிழ்ச்சியாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்