கோலிதான் பாகிஸ்தான் அணிக்கு தலைவலியாக இருக்கப் போகிறார்… இந்திய முன்னாள் வீரர் கருத்து!

வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (15:33 IST)
கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய ஆட்டத்திறனில் சோடையாக காணப்பட்டு வந்த விராட் கோலி, கடந்த ஆண்டு அதை மீட்டெடுத்தார். அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு நடந்த டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி இந்திய அணிக்காக அதிக ரன்களை சேர்த்த வீரராக இருந்தார்.

இந்நிலையில் நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான  ஆசியக் கோப்பை தொடரின் போட்டி நடக்க உள்ள நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் பவுலர்களுக்கு கோலி மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர் “பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எப்படி கையாள வேண்டுமென கோலி நன்கு தெரிந்து வைத்துள்ளார். தற்போது ஃபார்மில் உள்ள கோலியை சமாளிப்பதற்கு பாகிஸ்தான் பவுலர்கள் கட்டாயம் தினறுவார்கள்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்