பாகிஸ்தானை அடுத்து வங்கதேசத்திற்கும் தண்ணீர் நிறுத்தமா? இந்தியா அதிரடி..!

Siva

செவ்வாய், 24 ஜூன் 2025 (11:17 IST)
ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம்  தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீர் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது வங்கதேசத்துடன் இந்தியா செய்துகொண்ட கங்கை நீர் ஒப்பந்தம் அடுத்த ஆண்டு காலாவதியாக இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதில் இந்தியா மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியாவின் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதாகவும், எனவே 2026 ஆம் ஆண்டு காலாவதியாகும் கங்கை நீர் ஒப்பந்தத்தை நீட்டிப்பதை தவிர்த்து, புதிய ஒப்பந்தம் குறித்து மறுபரிசீலனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அப்படியே இந்தியா - வங்கதேசம் இடையே புதிய கங்கை நீர் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், அது சுமார் 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலான ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. எதிர்கால தேவைக்கு ஏற்ப இரு நாடுகளும் நீரின் அளவை பங்கிட்டுக்கொள்வதில் குறுகிய கால ஒப்பந்தமே சரியானது என்று இந்தியா வாதிட்டு வருகிறது.
 
ஏற்கனவே பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீர் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது வங்கதேசத்துடனான கங்கை நீர் ஒப்பந்தத்திலும் மறுபரிசீலனை செய்வதாக இந்தியா தெரிவித்துள்ளது, இது மேலும் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்