வழக்கமாக இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் டிக்கெட் விற்பனை களைகட்டும். டிக்கெட் விற்பனை அறிவிக்கப்பட்ட உடனேயே மொத்த டிக்கெட் விற்பனையும் சில நிமிடங்களில் முடிந்துவிடும். அதுமட்டுமில்லாமல் போட்டி நடக்கும் மைதானத்துக்கு அருகில் உள்ள ஹோட்டல்களில் அறைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு வாடகை எல்லாம் இரட்டிப்பாகும்.
ஆனால் இந்த முறை அப்படி எதுவும் நடக்கவில்லை. சொல்லப்போனால் டிக்கெட் விற்பனையே மந்தமாகதான் உள்ளதாம். அதற்குக் காரணம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் முன்னணி பேட்ஸ்மேன்களான கோலி, ரோஹித், பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் போன்றவர்கள் இல்லாததுதான் என சொல்லப்படுகிறது.