தோனி மட்டும் ஓப்பனிங் இறங்கியிருந்தால்… பாராட்டி பேசிய கௌதம் கம்பீர்!

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (10:22 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தற்போது பாஜக எம் பி யாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் அவர் ஆர் சிபி அணி வீரரான விராட் கோலியிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

வழக்கமாக தன்னுடன் விளையாடிய வீரர்களை பற்றி நெகட்டிவ்வாக மட்டுமே பேசிவரும் கம்பீர், இப்போது தோனியைப் பாராட்டி பேசியுள்ளார். அவரது பேச்சில் “தோனி மட்டும் தான் விளையாடிய காலத்தில் பின்வரிசையில் இறங்கி விளையாடாமல் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி இருந்தால் அனைத்து சாதனைகளையும் முறியடித்திருப்பார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்