ஐபிஎல் தொடர் ரத்தாகுமா?... பிசிசிஐ துணைத் தலைவர் அளித்த பதில்!

vinoth

வெள்ளி, 9 மே 2025 (08:22 IST)
பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய முப்படை பாகிஸ்தானின் 9 இடங்களில் குறிவைத்துத் தாக்கியது. தீவிரவாதிகள் முகாமைதான் தாக்கினோம் என்று இந்தியா சார்பில் சொல்லப்பட்டாலும், மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டை வைத்தது.

இதையடுத்து பாகிஸ்தான் இந்திய எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்த, இந்தியாவும் பதிலடித் தாக்குதல் நடத்துகிறது. இதன் காரணமாக இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் உள்ளது. இதன் காரணமாக நேற்று இமாச்சலின் தரம்ஷாலா மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதனால் ஐபிஎல் தொடர் பாதுகாப்புக் காரணங்களால் இரத்து செய்யப்படலாம் என சொல்லப்படும் நிலையில் அது குறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பதிலளித்துள்ளார். அதில் “இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. சூழ்நிலையை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம்.  கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம்.  தொடரைத் தொடர்ந்து நடத்துவது சம்மந்தமான முடிவினை இன்று எடுக்கவுள்ளது.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்