பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 10 ஓவரில் 122 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் ப்ரியன்ஸ் ஆர்யா மற்றும் ப்ரம்சிம்ரன் சிங் முறையே 70 மற்றும் 50 ரன்கள் எடுத்தனர். ஆட்டம் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருந்த வேளையில், எல்லை பகுதியான மாநிலங்களில் ஏற்பட்ட போர் பதற்றத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதன் தாக்கமாக, போட்டி நடைபெற்று கொண்டிருந்த மைதானத்திலும் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களால் போட்டி நிறுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.