இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று தொடங்குகிறது. சற்று முன்னர் போடப்பட்ட டாஸில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதை தொடர்ந்து, இந்திய அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்யக் களமிறங்க உள்ளது.
ஏற்கனவே இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளதால், இந்த போட்டியிலும் தோல்வியடைந்தால் தொடரை இழந்திடும் அபாயம் உள்ளது. இதனால், தொடரை இழக்காமல் இருக்கவும், தொடரை சமன் செய்யவும் இந்திய வீரர்கள் இன்று மிகவும் உத்வேகத்துடன் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட் செய்ய உள்ளதால், ஒரு வலுவான இலக்கை நிர்ணயித்து, ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் ரோஹித் ஷர்மாவின் தொடக்கம் இன்று இந்திய அணிக்கு மிக முக்கியப் பங்காற்றும்.