ஓய்வு பெற்ற பிறகு பாகிஸ்தான் ரகசியத்தை வெளியிடுவேன்: அப்ரிடி

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2016 (22:34 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் உள்ள மோசமான நிலையை ஓய்வு பெற்ற பின்பு வெளியிடுவேன் என்று சாகித் அப்ரிடி கூறியுள்ளார்.


 


டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி. 20 ஓவர் போட்டியில் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை பற்றி கூறுகையில்,” கிரிக்கெட் நிர்வாகம் நிறைய தவறுகள் செய்துள்ளது. வீரர்கள் தரம் சர்வதேச அளவில் இல்லை. பாகிஸ்தானில் கிரிக்கெட் எப்படி மோசமான நிலையில் உள்ளது என்பதை ஓய்வு பெற்ற பிறகு வெளியிடுவேன்.”என்றார்.

20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு பெறவில்லை. 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு பெறவில்லை.
அடுத்த கட்டுரையில்