வங்கதேசத்துக்கு 410 ரன்கள் இலக்கு.. இந்திய பேட்டிங் அபாரம்!

Webdunia
சனி, 10 டிசம்பர் 2022 (15:39 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 409 ரன்கள் குவித்த நிலையில் வங்கதேச அணிக்கு 410 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
இன்றைய போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்தார் என்பதும் விராட் கோலி சதம் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்திய வீரர்கள் இன்று அபாரமாக பேட்டிங் செய்ததால் 400 ரன்களுக்கு மேல் குவிக்கபட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது. இதனை அடுத்து 410 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் வங்கதேச அணி விளையாட உள்ள நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது என்பதை இன்னும் சில மணி நேரம் பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்