தன்னுள் இவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்று சொல்லியும் ஒருத்தரும் உதவவில்லையா....?

திங்கள், 15 ஜூன் 2020 (07:05 IST)
பிரபல பாலிவுட் நடிகரும் எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்தவருமான நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் திடீரென நேற்று  தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அவரது மரண செய்தியை தற்போது வரை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியவைல்லை. அவ்வளவு அழகும், நடிப்பு திறமையும் , இளகிய மனமும் கொண்ட சுஷாந்த் சிங்கின் ஒவ்வொரு நினைவுகளும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இன்னும் இன்னும் அவரை நேசிக்கத்தான் வைக்கிறது.

கடந்த 8ஆம் தேதி சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர்  திஷா ஷலியன்  14-வது மாடியில் இருந்து கீழே குதித்து திஷா தற்கொலை செய்துகொண்டார் அதுமுதலே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் இது குறித்து நண்பர்களிடமும் சில பாலிவுட் பிரபலங்களிடமும் கூறியிருக்கிறார். ஆனால் யாரும் அவருடன் அமர்ந்து பேச கூடவில்லையாம். அதன் பிறகே சுஷாந்த் தற்கொலை முடிவை எடுத்ததாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Just 5 days ago, this blind about Sushant Singh came out. He was in depression for a long time. Was facing severe professional & personal issues. Most folks in Bollywood were aware about this. But alas. None tried to sit down & help him. His suicide isn't out of sudden. Sad. RIP https://t.co/9EVl7qKVPR

— Navneet Mundhra (@navneet_mundhra) June 14, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்