குழந்தை பெற்று கொண்டால் ரூ.3 லட்சம்.. அரசின் அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (07:56 IST)
குழந்தை பெற்றுக் கொண்டால் 3 லட்சம் ரூபாய் மானியம் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஜப்பான் நாட்டில் மக்கள் தொகை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே வேளையில் ஜப்பான் நாட்டில் குழந்தை பிறப்பு குறைந்து வருவதாகவும் அதேபோல் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாகவும் அதனால் நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
 
இதனை அடுத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு மூன்று லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டு நிதியமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் ஜப்பான் நாட்டில் வருங்காலத்தில் மக்கள் தொகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்