முற்றிலும் ஒழிந்தது எபோலா நோய்: கடைசி நோயாளியும் குணமானார்

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (20:53 IST)
முற்றிலும் ஒழிந்தது எபோலா நோய்
தற்போது கரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆட்டுவித்து வருகிறது போல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எபோலா வைரஸ் உலகம் முழுவதிலும் பயங்கரமாக பரவியது. குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு எபோலா வைரஸ் ஆப்பிரிக்க நாடில:ஒ; பரவிய போது இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நோய்க்கு பலியாகினர்
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக எபோலா வைரஸ் நோயாளிகள் குணம் ஆகி கொண்டே வந்த நிலையில் நேற்று எபோலா வைரஸினால் பாதிக்கப்பட்ட கடைசி நோயாளியும் குணமானார் இதனை அடுத்து எபோலா வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது 
 
மேலும் கடந்த சில நாட்களாக ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பினால் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை என்றும் இருப்பினும் 42 நாட்களுக்கு பிறகே முழுமையாக இந்த நோய் முடிவுக்கு வந்துவிட்டது அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியும் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது ஒழிக்கப்பட்டு விட்டாலும் அதற்கு பதிலாக வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவது விஞ்ஞானிகளுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்