பிரியாவிடை கொடுத்து கிராமத்தில் இருந்து சென்னை திரும்பிய மணிமேகலை!

Webdunia
புதன், 20 மே 2020 (13:32 IST)
தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுததால் மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். இதற்கிடையில் தமிழகம் முழுவதும் வருகிற மே 31ம் ஆம் தேதி வரை ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதனால் வெளியூர் சென்ற சிலர் வீடு திரும்ப முடியாமல் முழித்துக்கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் தொகுப்பாளினி மணிமேகலை வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ளார். இதனால் சென்னை திரும்ப முடியாமல் கிராமம் ஒன்றில் மாட்டிக்கொண்டுள்ளார். அங்கிருந்த படியே கிராம குழந்தைகளுடன் விளையாடுவது , முறுக்கு சுடுவது உள்ளிட்ட பல வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் 61 நாட்களுக்கு பிறகு அந்த கிராமத்தில் இருந்து சென்னை திரும்புவதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மொட்ட மடியில் அமர்ந்து நிலா சோறு சாப்பிடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு " என் குடும்பத்தில் கிடைத்த எல்லா சந்தோஷத்தையும் நீங்க திருப்பி கொடுத்தீங்க. உங்க கூட இருந்த இந்த 61 நாட்கள் தான் 2020ல் எனக்கு நடந்த ஒரே நல்ல விஷயம். கண்டிப்பா உங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன். இவ்வளவு நாள் பாசத்தோடு எங்களை பார்த்துகிட்ட உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி என கூறி பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Chennai Tomo

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்