தந்தையின் பிறந்தநாளில் மனம் உருகிய அதர்வா - எமோஷனல் பதிவு!

புதன், 20 மே 2020 (08:03 IST)
மறைந்த நடிகர் முரளியின் மகனான இளம் நடிகர் அதர்வா ஏகப்பட்ட பெண் ரசிகைகள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அதர்வா தொடர்ந்து பரதேசி, இரும்பு குதிரை, பூமராங் , இமைக்கா நொடிகள் என பல வெற்றி படங்களை கொடுத்து இளம் பெண்களின் கனவு கதாநாயகனாக வலம் வருகிறார்.

அதர்வாவுக்கு காவியா என்ற அக்காவும், ஆகாஷ் என்ற தம்பியும் இருக்கிறார்கள். அவரது தம்பி ஆகாஷ் நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவுக்கார பெண் ஒருவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் மறைந்த நடிகர் முரளியின் பிறந்தநாளான இன்று தந்தையை இழந்து வாடும் மகன் அதர்வாக இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில், நான் சந்தித்த மிகச் சிறந்த மற்றும் வலிமையான நபர் நீங்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா. நாங்கள் உன்னை நேசிக்கிறோம், தினமும் உங்களை மிஸ் பண்ணுகிறோம்! என கூறி குழந்தையாக அப்பாவின் கழுத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிடுள்ளார்
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

To the coolest and the strongest person I’ve ever known . Happy birthday dad. We love you and miss you everyday !

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்