''இது முற்றியும் பொய்யான தகவல்''- நடிகை நித்யாமேனன் விளக்கம்

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (20:40 IST)
''நடிகை நித்யாமேனன் கூறியதாக வெளியான தகவல் பரவிய நிலையில், ''நான் எந்தப் பேட்டியும் கொடுக்கவில்லை. இது முற்றியும் பொய்யான தகவல் ‘’என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை  நித்யா மேனன். இவர் வெப்படம், ஓகே கண்மணி, காஞ்சனா 2, 24,  விஜய்யுடன் மெர்சல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தனுஷுடன் இவர் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம்  படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு மீடியாவுக்கு பேட்டியளித்த நித்யாமேனன், தெலுங்கு சினிமாவில் எந்த வித பிரச்சனையும் எதிர்கொள்ளவில்லை. ஆனால், தமிழ் சினிமாவில் நிறைய ப்ரியச்சனைகள் எதிர்கொண்டேன், ஒரு தமிழ் ஹீரோ என்னை துன்புறுத்தினார் என கூறியதாக வதந்தி  பரவியது.

இதுகுறித்து தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நித்யா மேனன்,’’ இந்த மாதிரி வதந்திகளை யார்  பரப்புவது? இதுபோல் நான் எந்தப் பேட்டியும் கொடுக்கவில்லை. இது முற்றியும் பொய்யான தகவல் ‘’. இந்த மாதிரி பொய்யான தகவலை நிறுத்துங்கள்'' என்று விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்