''எதற்கும் துணிந்தவன்'' படத்தின் முக்கிய அறிவிப்பு

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (22:24 IST)
சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன் பணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் மார்ச் 2ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதனை அடுத்து சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்