நிவின் பாலியின் தமிழ் படம், சான்டா மரியா...?

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2016 (15:46 IST)
ஒரு ரவுடியின் மரணத்தோடு சம்பந்தப்பட்ட பல்வேறு கதைகளை முன்னும் பின்னுமாக சொல்லும் கன்னட நான் லீனியர் திரைப்படம், உலிதவரு கண்டென்தே.


 


இந்தப் படத்தை மிஷ்கினின் உதவியாளர் கௌதம் தமிழில் இயக்கி வருகிறார். ரவுடி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், நிவின் பாலி.
 
நேரம் படத்துக்குப் பிறகு நிவின் பாலி நடிக்கும் நேரடி தமிழ் படம் இது. ஒரு ரிப்போர்டரின் பார்வையில் சொல்லப்படும் இந்த படத்துக்கு சான்டா மரியா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 
உலிதவரு கண்டென்தே கடலோர கிராமம் ஒன்றை மையப்படுத்தியது. அதனால், தமிழ் படத்தை தூத்துக்குடியில் தொடங்கியுள்ளனர். ரிப்போர்ட்டர் வேடத்தில் ஸ்ரத்தா ஸ்ரீனி நடித்து வருகிறார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்