நயன்தாரா மனசு யாருக்கு வரும்....

Webdunia
ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (12:58 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் இமைக்கா நொடிகள். இந்த படம் பல்வேறு நெருக்கடிகளை கடந்து கடந்த 30ம் தேதி வெளியானது. 

 
ரசிகர்களிடம் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இமைக்கா நொடிகள் படத்தின் தயாரிப்பாளர் நயன்தாராவிற்கு ரூ 75 லட்சம் வரை சம்பள பாக்கி வைத்திருந்தாராம். இதனால் கடைசி நேரத்தில் படம் ரிலிஸிற்கு சிரமம் ஏற்பட்டது. 
 
அந்த நேரத்தில் நயன்தாரா அந்த பணத்தை விட்டு விடுங்கள், இனி கேட்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
 
அதை தொடர்ந்து தயாரிப்பாளருக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டதாம். இந்த காலத்தில் சில முன்னணி ஹீரோக்கள் சம்பளத்தை வைத்தால் தான் டப்பிங் பேசுவேன் என்று கூறும் சூழலில் நயன்தாரா மனசு யாருக்கு வரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்