சைத்தான் பட நாயகியின் சாதனை

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (16:21 IST)
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் தமிழில் டப்பிங் பேச ஆர்வம் கொள்வதுண்டு. ஒருசிலர் தமிழில் டப்பிங் பேசியும் இருக்கிறார்கள். ஆனால், பல படங்கள் நடித்த பிறகு.
 

 
ஆனால், முதல்முறையாக மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் அருந்ததி நாயர் தனது முதல் படம் சைத்தானில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார்.
 
விஜய் ஆண்டனி நடிப்பில் பிரதீப் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அருந்ததி நாயர் நாயகி. இயக்குனர் கேட்டுக் கொண்டதால் அருந்ததியே தனது கதாபாத்திரத்துக்கு சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார். இது எப்படி சாத்தியமானது?
 
என்னுடைய அப்பா கேரளாவை சேர்ந்தவர். ஆனால் எனது அம்மா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர். என் அம்மா தமிழில் பேசுவதால் நானும் எளிதாக தமிழ் பேசக்கற்றுக்கொண்டேன். நான் நடிக்க வருவதற்கு முன்பே எனக்கு தமிழ் பேசத்தெரியும். இதனால் தான் சைத்தானில் எளிதாக டப்பிங் பேசினேன் என்றார்.
அடுத்த கட்டுரையில்