மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் என்ன தெரியுமா...?

Webdunia
உலகத்தில் எப்போதெல்லாம் அநீதியும் தீய சக்தியும் தலை விரித்து ஆடுகிறதோ, அப்போதெல்லாம் அதனை வேரோடு கருவறுக்க விஷ்ணு பகவான் வந்து சேர்வார்  என்று நம்பப்படுகிறது.

1. மச்ச அவதாரம் - தாயின் வயிற்றிலிருநது ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன்.
 
2. கூர்ம அவதாரம் - மூன்றாம் மாதம் கவிழந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.
 
3. வராக அவதாரம் - ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.
 
4. நரசிம்ம அவதாரம் - எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம் .
 
5. வாமன அவதாரம் - ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.
 
6. பரசுராம அவதாரம் - வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.
 
7. ராம அவதாரம் - திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.
 
8. பலராம அவதாரம் - இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.
 
9. கிருஷ்ண அவதாரம் - முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.
 
10. கல்கி அவதாரம் - இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும், தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்