ஒரே விமானத்தில் பயணம் செய்த விஜயகாந்த்,வைகோ : அருகருகே அமர்ந்து பேசியபடி வந்தனர்

Webdunia
சனி, 17 அக்டோபர் 2015 (18:44 IST)
மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய வைகோவும், விஜயகாந்தும் ஒரே விமானத்தில் பயணம் செய்ய நேர்ந்ததால் இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டு வந்த சம்பவம் தமிழக அரசியலில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று  கயத்தாறில் நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் அஞ்சலி விழாவில் கலந்துகொண்டு, இன்று காலை 11 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்தார்.
 
அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த், விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு  விழாவில் நேற்று பங்கேற்றுவிட்டு சென்னைக்கு அதே விமானதில் பயனம் செய்தார். 
 
ஒரே விமானத்தில் பயணம் செய்ய நேர்ந்ததால், இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டே வந்தனர். இதை அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் ஆச்சர்யமாக பார்த்தனர்.