போலீஸையே அலறவிட டிரஸ்சை கழட்டி நாடகமாடிய திருட்டு சகோதரிகள்

Webdunia
சனி, 7 ஜூலை 2018 (15:20 IST)
திருட்டுப் பழியிலிருந்து தப்பிக்க, 2 திருட்டு சகோதரிகள் போலீஸ்காரர்கள் மீதே கற்பழிப்புப் பலி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் பல இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து, சகோதரிகள் இருவர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். பல்வேறு விசாரணைக்குப் பின்னர் போலீஸார் சரிதா என்ற பெண்ணையும், சுஜாதா என்ற அவரது சகோதரியையும் கைது செய்ய திட்டமிட்டு அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றனர். 
 
சகோதரிகள் இருவரும் போலீஸாரைப் பார்த்ததும், தங்களது ஆடையை அவிழ்த்து போலீஸ்காரர்கள் எங்களை மானப்பங்கப் படுத்துகின்றனர் என கூச்சலிட்டனர். இதனால் அந்த ஆண் போலீஸ் பெண் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெண் போலீஸ், அந்த திருட்டு சகோதரிகளை கைது செய்தனர். அவர்கள் மீது கொள்ளை குற்றம் போலீஸார் மீது கொய் பழி போடுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்