அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

Mahendran
சனி, 21 செப்டம்பர் 2024 (08:57 IST)
தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை வரை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக, தமிழ்நாடு முழுவதும் பகலில் கடும் வெப்பம் இருந்தாலும், இரவில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை நகரில் நேற்று இரவு முதல் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும், வேலூர், இராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய ஏழு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
எனவே, மேற்கண்ட 11 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்