கால்பந்து போட்டியில் தோற்றதால் ஆத்திரம்.. மாணவர்களை எட்டி உதைத்த பி.டி சார்! - பாய்ந்தது நடவடிக்கை!

Prasanth Karthick
ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2024 (18:12 IST)

சேலத்தில் விளையாட்டு போட்டிகளில் தோற்ற பள்ளி மாணவர்களை அந்த பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

 

 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் உடற்கல்வி ஆசிரியராக அண்ணாமலை என்பவர் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றில் அந்த பள்ளி மாணவர்கள் அணி கலந்துக் கொண்டு விளையாடி தோல்வி அடைந்துள்ளனர்.

 

இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை பள்ளி மாணவர்களை தரையில் அமர வைத்து கெட்ட வார்த்தைகளால் திட்டி, ஷூ காலால் எட்டி மிதித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

அதை தொடர்ந்து பெற்றோர் இதுகுறித்து புகார் அளித்த நிலையில் பிடி ஆசிரியர் அண்ணாமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்