ஆன்லைனில் படம் வெளியிடுவதால் பலரும் பாதிக்கப்படுவார்கள்- கடம்பூர் ராஜூ

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (14:38 IST)
ஆன்லைனில் படம் வெளியிடுவது தொடர்ந்தால் சினிமாத்துறைக்கு உகந்ததாக இருக்காதுஎன தமிழக செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது :

சினிமாத்துறையின் 100 ஆண்டு கால வரலாற்றில் ஆன்லைனில் படம் வெளியானது இதுவே முதன்முறை.

எனவே ஆன்லைனில் திரைப்படங்களை வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்  ஆன்லைனில் ஜோதிய நடிப்பில் பொன்மகள் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்