தமிழகத்தில் வரும் 21,22 ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ~!

Webdunia
சனி, 19 நவம்பர் 2022 (15:00 IST)
தமிழ் நாட்டில்   நவம்பர் 21,22 ஆகிய நாட்களில் கனமழை பெய்யும் என வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.  சமீபத்தில், சென்னை உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால்,  மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில்,  மீண்டும் வரும் நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

ALSO READ: தமிழ்நாட்டில் கனமழை: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!
 

மேலும்,  19 ஆம் தேதி  ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும், நவம்பர் 21 ஆம் தேதி,  விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், மற்றும் புதுவை ஆகிய மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்