ஆளுநர் ரவி அளிக்க இருந்த தேநீர் விருந்து ரத்து.. என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (07:58 IST)
இன்றைய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடத்த இருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதேபோல் காங்கிரஸ் கட்சியும் தங்கள் எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பார்கள் என்று அறிக்கை வெளியிட்டிருந்தது. 
 
இந்த நிலையில் ஆளுநர் ரவி அளிக்க இருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தேநீர் விருந்து நடத்தும் வேறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்