நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மீண்டும் ஓர் பயங்கரம்: 4 பேர் பரிதாப பலி!

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2016 (08:09 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்டது.


 
 
இந்த ரயில் நிலையத்தில் நடந்த அந்த கோர சம்பவம் குறித்தான வழக்கு இன்னமும் முடியாத நிலையில், அதே ரயில் நிலையத்தில் மீண்டும் ஓர் கோர சம்பவம் நடந்துள்ளது.
 
நேற்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 வடமாநில இளைஞர்கள் பரிதாபமாக பலியானார்கள். தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது மின்சார ரயில் வந்ததால், 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
 
இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்