கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பிய கருணாநிதி

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2016 (16:07 IST)
சட்டபேரவை தேர்தல் கூட்டணி குழப்பம் நீடித்துவரும் நிலையில் காங்கிரஸ் கட்சி திமுகவுடனான கூட்டணியை இன்று உறுதி செய்தது. சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார்.


 


பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும், தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கேற்பது என்பது காங்கிரஸின் இலக்கல்ல. வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து திமுகவே முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

குலாம் நபி ஆசாத் உடனான கூட்டணி குறித்த சந்திப்பை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருணாநிதி நேரிடையாக ஒளிபரப்பினார்.


 
(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk'));

A meet with Ghulam Nabi Azad at Gopalapuram.

Posted by Kalaignar Karunanidhi on Friday, February 12, 2016