ஜெயலலிதா வாழ்த்து சொன்ன பாஜக அமைச்சர் - கூட்டணிக்கு அச்சாரமா?

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2016 (05:37 IST)
காவிரி பிரச்சனையை ஜெயலலிதா சிறப்பாக கையாண்டார். அதற்காக எனது வாழ்த்துக்கள் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

 
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.
 
பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “காவிரி பிரச்சினையில் முதலமைச்சர் ஜெயலலிதா மிகச்சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். மிகப் பொறுமையாக அதை கையாண்டிருக்கிறார். அதற்காக எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
 
தமிழகத்தில் நடந்த முழு அடைப்பில் பிரச்சினை எதுவும் நடக்கவில்லை. அமைதியாக நடக்கக்கூடிய, வியாபாரிகளாக முன்வந்து நடத்தக் கூடிய முழு அடைப்புக்கு எங்கள் முழு ஆதரவை தெரிவித்தோம்.
 
கர்நாடகாவில் நடந்த வன்முறைக்கு பாஜக தான் காரணம் என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதெல்லாம் அர்த்தமற்றவை” என்று கூறியுள்ளார்.

தமிழக முதல்வரை சந்தித்ததும், அதன் பிறகு அவருக்கு வாழ்த்து தெரிவித்ததும் வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவிப்பதன் சமிக்ஞையாக இருக்கலாம் என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அடுத்த கட்டுரையில்