பிரதமர் மோடி குறித்து வெறுக்கத்தக்க வகையில் பேசுவதா.? கார்கேவுக்கு அமித்ஷா கண்டனம்.!!

Senthil Velan

திங்கள், 30 செப்டம்பர் 2024 (13:10 IST)
பிரதமர் மோடி குறித்து வெறுக்கத்தக்க வகையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
 


ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் உயிரோடு இருப்பேன் என்று கூறியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் நேற்றைய பேச்சு, முற்றிலும் வெறுக்கத்தக்கதாகவும், அவமானகரமானதாகவும் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இவ்விஷயத்தில் அவர், தனது கட்சித் தலைவர்களையும், கட்சியையும் விட விஞ்சிவிட்டார் என்றும் அவரது பேச்சில் வெறுப்பின் கசப்பு வெளிப்பட்டது என்றும் கூறியுள்ளார். 
 
பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றிய பிறகுதான் தான் இறப்பேன் என்று கூறி தேவையில்லாமல் தனது தனிப்பட்ட உடல்நல விஷயங்களில் பிரதமர் மோடியை இழுத்துள்ளார் என்று அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி மீது காங்கிரஸுக்கு எவ்வளவு வெறுப்பும் அச்சமும் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார். 

கார்கே, ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று அவருக்காக பிரதமர் மோடி பிரார்த்திக்கிறார் என்றும்  நாங்கள் எல்லோருமே பிரார்த்திக்கிறோம் என்றும் அவர் பல்லாண்டு காலம் வாழட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


ALSO READ: 'செந்தில் பாலாஜி தியாகி என்றால்' பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் துரோகிகளா.? ராமதாஸ் காட்டம்.!!
 
2047க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாகும் வரை மல்லிகார்ஜுன கார்கே வாழட்டும் என்று அமித்ஷா பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்