கமல்ஹாசனின் மகள்கள்தான் பிரிவுக்கு காரணமா? - கவுதமி விளக்கம்

Webdunia
புதன், 2 நவம்பர் 2016 (11:03 IST)
நடிகர் கமல்ஹாசன் உடனான பிரிவுக்கு அவரின் மகள்கள்தான் காரணமா என்பதற்கு நடிகை கவுதமி விளக்கம் அளித்துள்ளார்.


 

 
நடிகர் கமல்ஹாசன் தனது மனைவி சரிகாவை பிரிந்த பிறகு கவுமதியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் திடீரென கவுதமி, நடிகர் கமல்ஹாசன் உடனான 13 ஆண்டுகால வாழ்க்கை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். 
 
இந்நிலையில், ஒரு வார இதழுக்கு கவுதமி பேட்டியளித்துள்ளார். அதில், இந்த பிரிவுக்கு கமல்ஹசனின் மகள்களான நடிகை ஸுருதி மற்றும் ஆக்‌ஷரா ஆகியோர்தான் காரணமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கவுதமி “அவர்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களுக்கு எதிராக நன் ஒருபோதும் நின்றதில்லை. மாறாக, ஆதரவாகவே இருந்துள்ளேன். எங்களுக்கு இடையில் எந்த மனஸ்தாபமும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்