நல்ல பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்றபோது விபரீதம்: இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (14:18 IST)
நல்ல பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்றபோது விபரீதம்: இளைஞர் மருத்துவமனையில் அனுமதி
நல்ல பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்ற இளைஞரின் வாயில் நல்ல பாம்பு கொத்தி விட்டதை அடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நல்ல பாம்பை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் நல்ல பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்ற போது திடீரென அந்த இளைஞரின் வாயில் நல்ல பாம்பு கடித்தது
 
கர்நாடக மாநிலம் ஷிவமோகா என்ற பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பகுதியில் இருந்த மற்றவர்கள் அந்த இளைஞரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்
 
மருத்துவமனையில் தற்போது அந்த இளைஞருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்த வீடியோவை இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்