நடிகை தீபிகா படுகோன் மருத்துவமனையில் திடீர் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி

புதன், 28 செப்டம்பர் 2022 (10:41 IST)
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன் என்பதும் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தீபிகா படுகோனுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவரது உடல் தற்போது தேறி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
பிரபாஸுடன் படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென தீபிகாவுக்கு இதயத்துடிப்பு அதிகரித்தது என்றும், இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தீபிகா படுகோன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்