பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் : செல்போனில் படம் எடுத்த நபர் !

Webdunia
சனி, 29 ஜூன் 2019 (18:10 IST)
சமீக காலமாகவே நாட்டில் வன்முறை சம்பவம் அதிகரித்து வருகிறது.அதற்கு சகிப்புத் தன்மை குறைந்து வருவதும், இளைஞர்கள் காதல் செய்வதும், காதலித்த பெண் கிடைக்காததால்  அவர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. 
தற்போது அதேபோல் ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. அதில், கர்நாடகாவில் உள்ள மங்களூர் என்ற பகுதியில் ஓரு இளைஞர், ஒரு இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்தார். அதை ஒருவர் கேமராவில் படம் எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தது.
 
ஒரு பெண்ணை ஒருவர் கொலை செய்வதை தடுக்காமல் அதை வீடியோ எடுத்து பதிவிட்ட நபருக்கு பலரும் விமர்சனமும் கண்டனமும்  தெரிவித்து வருகின்றனர்.
 
காதலை ஏற்க மறுத்தன் காரணாக இந்தக் கொலை நடத்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்